வாய்ப்பு தேடி அலைந்த கதை.......4
அடுத்த நாள் காலை வின் டிவி வாசலுக்கு வரும் போது அந்த 5 மாடி கட்டிடத்துக்கே சொந்தக்காரன் போல உள்ளே நுழைந்தேன்....
நடையில் ஒரு தெளிவு இருந்தது......ஒரே மூச்சில் 5 மாடியை படி வழியே ஏறினேன். வரவேற்பு பெண் வழக்கம் போல் ஒரு சிரிப்பை உதிர்த்தாள். வருகை பதிவேட்டை கேட்ட போது என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.. அது எதுக்கு ........ இது அவள்
கையெழுத்து போட தான்......
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை....... சிரித்துக்கொண்டே வருகை பதிவேட்டை எடுத்து மேசை மீது வைத்தாள்.......
இரண்டாவது பக்கத்தில் என் பெயர் இல்லை......
எனக்கு குழப்பமாக இருந்தது..... பெயரை நாமே எழுதி விடலாமா.....?
மணி பார்தால் 9.37 .....
அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்....
சார் ஒண்னும் சொல்லலியா.....?
என்னை இன்னிலேர்ந்து கையெழுத்து போட சொன்னாரே.....!
அவளுக்கு என்னை பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்..... எப்ப சொன்னார்..... ? நேத்து நான் கிளம்புற வரைக்கும் எதுவும் சொல்லலியே...? என்றாள்
என்கிட்ட சொன்னார் என்றேன்.......
எப்ப.....?
1 மணிக்கு......
ராத்திரி ஒரு மணிக்கா.....?
ம்....
அப்ப... அதுவரைக்கும்.. அவளுக்கு புரிந்தது.... மோகன் வந்தாச்சா என யாரிடமோ கேட்டாள்.... வரல .... வர நேரம் தான் என அவுட் பிளாக் வாய்ஸ் மட்டும் வந்தது.....
நீங்க வெய்ட் பண்ணுங்க ஞானராஜ்....... என் பெயரை மிக அழகாக அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாள்...
நான் அந்த மோகனுக்காக காத்திருந்தேன்....... அவன் ரெட் ஹில்சில் இருந்து காலையில் கிளம்பி எம்.டி. தேவனாதன் வீட்டிற்க்கு போய் அங்கிருந்து. சி.ஈ.ஓ. பிளாரண்ட் வீட்டிற்கும் போய் விட்டு 9.30 மணிக்கு அலுவலகம் வருவான்.. எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புவான் என தெரியாது. பஸ் பயணம் தான். ஆனால் அலுவலகம் வரும் போது நெற்றியில் வைத்த குங்குமமும். விபூதியும் கலையாமல் இருக்கும்..... எனக்கு அவன் இன்றைக்கும் ஆச்சரியமானவன் தான்.......
மோகன் வந்து கையெழுத்து போட்டான். கையோடு என் பெயரை எழுதினான். ஞானராஜ் யாரு சார்..?
நான் தான் என்றேன்..
நீங்க தானா அது.... சினேகமாய் சிரித்தான்.... வாங்க கையெழுத்து போடுங்க என்றான்.
...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................கையெழுத்து போட்டு விட்டு என்ன செய்யனும் என்றேன்...... சார் வந்து சொல்வார் என்றான்...... அது அந்த பெண்ணிற்கு புதிதாய் இருந்திருக்க வேண்டும்....
எங்க ஆத்துக்காரர் கச்சேரிக்கு போறார் கதையாக... நானும் போய் வந்து கொண்டிருந்தேன்.... ஒரு வேலையும் எனக்கு கொடுக்கப்பட வில்லை....அனைவரும் பரபரப்பாக வேலை செய்ய நான் தூங்கி வழிந்து கொண்டிருந்தேன்......
ஒரு நாள் ஒரு இயக்குனரோடு என்னை உதவியாளனாக அனுப்பினார்கள்.... அது “ நமக்கேன் வம்பு” என்ற அரசியல் நையாண்டி நிகழ்ச்சி.... இயக்குனர் வண்டி இருக்கா .....? போட் கிளப்புக்கு வந்துடு. ......? என சொல்லி விட்டு கிளம்பினார்..
போட் கிளப்பா அது எங்கிருக்கு...? ஒரு வழியாக கண்டு பிடித்து போய் சேர்ந்தேன்...... அங்கு எனக்கு முன்னாடி ஒரு ஆட்டோவில் அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார் இயக்குனர்..
என்னை முறைத்தபடி ... ஏன் இவ்வளவு நேரம்.... சீக்கிரமா வரனும் புரியுதா.... என சொல்லிய படி ஸ்கிரிப்ட் பேடை என்னிடம் தினித்தார்... பயபக்தியோடு அதை வாங்கி கொண்டேன்....
பஸ்ட் டைலாக் என்னப்பா....? என்றார்.... அக்குளுக்குள் வைத்த பேடை பார்த்து.... அத பாத்து சொல்லுயா.. என்றார்.... அப்போது தான் எனக்கு உரைத்தது.... அவர் கேட்பது என்னை தான் என்று..
பேடை எடுத்தால் அது ஒரு 10-15 பக்கம் இருக்கும்..... முதல் பக்கத்தில் ஒரு ஆட்டோ வருவது என எழுதி இருந்தது...... சார் ஆட்டோ வருது என்றேன்....
பின்ன வராம நிக்குமா.....! ஜோக்காம்......?
சரி ஆட்டோவ வர சொல்லு.. கணபதி நீங்க கேமராவ இங்க வைங்க......
ஆட்டோ வாப்பா.... என்றேன்....
யோவ் ... என்னயா.... ஆட்டோவ அந்த தெரு முனையில் இருந்து வர சொல்லு.... நீ அங்க போய்யா......
எனக்கு ஆரம்பமே சரியாக படவில்லை........!
எடுத்தார் ..... எடுத்தார்... எடுத்துக்கொண்டே இருந்தார்...... மத்தியானம் பிரியாணி கொண்டு வந்தான் மோகன்....... நல்ல பசி...
மாலை 4 மணி வரை ஆட்டோவை பல கோணங்களில் எடுதுக்கொண்டிருந்தார்... பேக் அப் சொல்லும் வரை ஆட்டோ தான் ஒரு டைலாக் கூட எடுக்க வில்லை ..... நாளைக்கு இதே லொக்கேஷன் .... இதே காஸ்டியூம் கண்டினியூட்டி ஞாபகம் வச்சிக்கங்க.. என்றார்...
அடுத்த ஒரு வாரம் போனது அந்த ஷூட்டிங் நடை பெற வில்லை.... அடுத்த சில நாட்களில் அவர் வேலைக்கு வர வில்லை.....
ஆபிசில் இவ்வாறு பேசினார்கள்.....
கலையில் இருந்து சாயந்திரம் வரை ஆட்டோ வருது.... போவுது..... ரெண்டு பீட்டா கேசட் காலி பண்ணி இருக்கன்யா....
அடுத்த சில நாட்களில் அங்கு பணி புரிந்த “மெய்யழகன்” நண்பரானார்..... அவருக்கு அந்த நிகழ்ச்சி ஒதுக்கப்பட்டது. உதவிக்கு நானே அனுப்பப்பட்டேன்.....
இவர் கையில் பேட் இல்லை.... ஒரு 5 பக்கம் மடித்து வைத்திருந்தார்.... காலை 9 மணிக்கு அதே இடத்தில் ஆரம்பித்த ஷூட் மாலை 5 மணிக்கு ஒரு எபிசோட் முடிந்திருந்தது.
மிக அழகாய் ஷாட் பிரித்தார்...சுலபமாய் எடுத்தார்.... நடித்த ராஜன் .... பாலாஜி. இருவரும் இதுக்கு தான்யா ‘மெய்’ வேணுங்கறது என்றார்கள்....
இரவு எடிட் முடிந்தது.... காலையில் அனைவரும் பார்த்து ‘குட்’ என்றார்கள். நான் ஒருவன் தான் உதவியாளன் என்பதால்.. எனக்கு இணை-இயக்குனர் என டைட்டில் போட்டர்...
ஓமகுச்சி நரசிம்மன், உதயா மற்றும் நான்.. வீரப்பா எங்க இருக்க....... |
சில நாட்களில் “பேட்டை ராமாயணம்” என்கிற சீரியல் துவக்கினார்கள் . அதன் இயக்குனர் கம்பராமாயண பாடல்களை அப்படியே சொல்வார்... நான் தொறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்...
அது எண்ணுரில் இருக்கும் தாழங்குப்பத்தில் எடுத்தோம்...... நம்ம வாய் எப்பவுமே சும்மா இருக்காதே ஏதாவது கமெண்ட் சொல்லிட்டே இருப்பேன்......
ஆச்சியுடன்.... |
அதில் ஒரு பெரிய டைலாக் ஒரு 1500 அடி இருக்கும் .... 2 முறை ரிகர்சல் பார்த்து ஒரே டேக். ஓகே ஆனது....
|
ஒரு நடிகன் உருவாகிறான்... |
ஒரு நாள் ஒரு காட்சி ஏரியா கவுன்சிலரை வரவேற்க்கு கூட்டம்...... படத்தில் உள்ளது போல் எல்லா விஷயமும் தாயாரானது..... கவுன்சிலர் யார் என தெரிய வில்லை..... நான் போய் சார். கவுன்சிலர் யாரு சார் என்றேன்........ என்னை மேலும் கீழுமாய் பார்த்தவர்.... நீதான் என்றார்.... எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி போனது....... அட போங்க சார் என்றேன்..... என்னை தோளில் தட்டி நீதான் போய் காஸ்டியூம் மாத்து என்றார்.......
ஒருவன் நல்ல நடிகனாக இல்லையா என்பதை அவன் கண்கள் கண்கள் சொல்லிவிடும்..... மேக்கப் போட்டு மேடைக்கு வரும் போது சட்டென ஒரு ஐடியா வந்தது.... கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டேன்..... பயத்தை கண்ணாடி மறைக்க தைரியமாக மேடையில் போய் அமர்ந்தேன்.....
காமிராமேனின் குளறுபடியால் ஒரு 10 டேக் வரை போனது...... அதற்குள் எனக்கு பயமும் போய் இருந்தது.......
இப்படியாக எனது சின்னத்திரை வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது..
உங்களுக்கு சி.ஜே.பாஸ்கர் ஞாபகம் இருக்கிறதா........ ? அவரை அடுத்த பகுதியில் சந்திக்கலாம்....!