அவர் என்னை அழைத்ததே ஒரு கதை.....
அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் போது...
அவரின் “சித்தி” முடியும் தறுவாயில் இருந்தது..... அதற்கு ஒரு விழா
எடுக்க போவதாக தகவல் வந்தது..... அது போதாதா......!
மீண்டும் ஒரு கடிதம் எழுதி அதை அஞ்சலில் அனுப்பினேன்......
உடனே பதில் வந்ததா என கேட்கக்கூடாது.......!
(டேய்...டேய்...இது ஓவர்.....)
இல்ல கேள்வி வரும் எனக்கு தெரியும்.....!
ஆனா பதில்.....?
விழா நடந்து முடிந்தது .... என கேள்விப்பட்டேன்..... அதற்க்குள் ஒரு
துயரமான சம்பவம் நடந்தது.....
என்னை கேள்விகள் ஏதும் கேக்காமல் ...... என் போக்கில் வளர விட்ட என்
தந்தை காலமாணார்.. ... பொதுவாக அம்மாவை பற்றி எல்லாரும் நிறைய
செய்திகளை பகிர்ந்து கொள்வார்கள்....
அப்பாவை பற்றி........யாரும் சொல்லவதில்லை... ஆனால்
”அபியும் நானும்” படம் ஒரு நல்ல உதாரணம்.....
அப்பாவுக்கும் ஒரு தனி கலர் உண்டு.....
அதைப்பற்றி இன்னெரு சமயத்தில் சொல்கிறேன்...
மைண்ட் சட்டென ‘பிளாங்’ ஆனது......எதிலும் மனசு செல்லவில்லை...
எங்க அக்காவின் கணவர்.... மாமாஅவருக்கு ஒருவரை தெரியும் .... என்றும்..
அவர் விண் டிவியில் நல்ல இடத்தில் இருப்பதாகவும்... அவரை போய் பார்...
என்றார்....
ஒரு கணம் மீண்டும் தலை சுத்தியது.... மறுபடியுமா....?
பார்க்கவில்லை என்றால் மாமா கோவிப்பார்.... பார்த்தால்... என்னை நான்
அறிமுகம் செய்து கொண்டு....மாமாவை பற்றி சொல்லி.... நட்க்கிற காரியமாக
எனக்கு தெரியவில்லை.....
மாமாவயும் அழைத்து சென்றால் இந்த அறிமுக படலம் கட் ஆயிடும் .....
நம்ம விஷயத நாம சொல்லிக்கலாம் என்று....மாமாவை அழைத்துக்கொண்டு
அவர் அலுவலகம் செனறேன்...
அப்போது அவர்கள் டெலிகாஸ்ட் தெடங்கவில்லை... டெஸ்ட் ரன் ஓடிக்கொண்டிருந்தது..
அலுவலகம் மிகுந்த பரபரப்பாய் இருந்தது......வரவேற்பு ஹாலில் மாமாவை அமர
வைத்து நான் நின்று கொண்டிருந்தேன்...
9 மணிக்கு நாங்கள் அங்கிருந்தோம்.... 11 மணி ஆகியும் அவர் வர வில்லை...
அவர் பெயர் ஃபிளரண்ட் பெரைரா... அங்கு சி.ஈ.ஓ... பெரிய பதவி....அதுவே
மாமாவுக்கு அங்கு போய் தான் தெரியும்...
எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது...... அதற்கு காரணம்...
அவர் மாமாவை நினைவு வைதிருக்க வேண்டும்...ஏனெனில் அவர் மாமாவின்
அப்பாவிடம் ஆங்கிலம் படித்தவராம்... இது வாத்தியாரையே மறந்துவிட்ட காலம்..
அவர் பையனை ஞாபகம் இருக்குமா....?
அப்போது அது நடந்தது.....பரபரப்பாய்யும் ...ஸ்டெய்லாகவும் ஒருவர் உள்ளே வர
அவர் பின்னாடி கிட்டதட்ட ஓடி வந்தனர் சிலர்.... வரவேற்பு அறையில் இருந்த
அனைவரும் எழுந்து நிற்க.....
அவர் அங்கு நின்று கொண்டிருந்த அனைவர் மீதும் ஒரு மின்னல் பார்வை வீசினார்...
மாமாவின் மீது ஒரு கணம் பார்வையை நிலைக்கவிட்டு........
“அண்ணே” என்று கூப்பிட்டு கட்டி அணைக்காத குறையாக அவர் கையை பிடித்து
உள்ளே அழைத்து கொண்டு போனார்... நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன்...
ஒரு நிமிடம் அந்த இடம் அதிசயப்பட்டு போனது.... என்னை சிலர் பொறாமையாக
பார்ப்பதை உணர முடிந்தது... நான் தலையை குனிந்து கொண்டேன்....
அட மாமா இவ்வளவு பெரிய ஆளா....?
ஒரு 20 நிமிடம் கழித்து ஒரு ஆள் வந்து உள்ளே அழைப்பதாக சொன்னார்...
எனக்கு ஒன்னுமே தெரியாது.....
உள்ளே போனால் மாமா டீ குடித்தபடி “பழங்கதை” பேசிக்கொண்டிருந்தார்...
நான் வந்து நின்றதை அவர்கள் கவனித்ததாக தெரியவில்லை... நீண்ட நேரம்
கழித்து ‘யாருப்பா’ என்றார்.... அப்போது தான் மாமாவும் என்னை திரும்பிப்பர்த்தார்..
நா சொன்ன மச்சான் இவன் தான்.... எப்ப பாரு சினிமா... சினிமான்னு தான் அலைவான்....
என்றார்... எனக்கு தலையில் கல்லை போட்டது போல் இருந்தது
இரண்டாவது குண்டையும் தூக்கி போட்டார்...இவன் நிறய கவிதை கூட எழுதுவான்னு..
(அவை எல்லாம் எனக்கே பிடிக்காதவை என்பது அவருக்கு எப்படி தெரியும்)
அவருக்கு அது புரிந்தது..... நா பாத்துக்கறேன்னே....’ நீ நாளைக்கு வந்து பாருப்பா...! என்று
விடை கொடுத்தார்...
நல்ல வேலை ஒரு மாசத்துக்கும்.....ஒரு நாளைக்கும் நிறைய வித்தியாசம் இருக்குல்ல...!
மாமா ... மச்சானுக்கு வேலை வாங்கி கொடுத்த சந்தோஷத்தில் ... ஊருக்கு கிளம்பினார்...
மறு நாள்.. அதே வரவேற்பு ஹால்...... அதே பரபரப்பு.... அதே கூட்டம்......அதே பார்வை.....
நான் சினேகமாக அவரை பார்க்க...... அவர் என்னை பார்க்கவே இல்லை... உள்ளே போய்
விட்டார்... தகவல் சொல்லலாம் என்றால் என்னவென சொல்வது என்பதில் எனக்கு
குழப்பம்.... நான் சொல்லும் விஷயங்களை சொல்பவன் அப்படியே சொல்ல வேண்டும்....
காத்திருப்பது தான் நமக்கு பழகி போன ஒன்றாயிற்றே.... காத்திருந்தேன்.......
2 மணிக்கு வெளியே வந்தார்......போனார்....... 6 மணி வரை வரவே இல்லை...
மீண்டும் அடுத்த நாள்... அதற்கு அடுத்த நாள்... இன்னெரு நாள்..... நாள் தவறாமல் நான்
அஙகு போவதும் வருவதுமாக இருந்தேன்....
சில நாட்கள் என்னை யார் என கேட்பார்.... நானும் முதலில் இருந்து..... சொன்னதும்......ஓ.....
யெஸ்.....யெஸ்... வெயிட் பண்னு எனறு சொல்லி விட்டு போவார்..... பின் அதை மறந்து போவார்....
ஒரு நாளும் அவர் என்னை உள்ளே அழைத்தது இல்லை..... என்னைப்பற்றி அவர் கேட்டதே
இல்லை.... அதற்கு அவருக்கு நேரமும் இல்லை.....!
முழுசா ஒரு மாசம் நடையா .... நடந்தேன்.......(பாரகன் செப்பல்ஸ் தான் தேய்ந்தது).................?
அன்று ஒரு முடிவோடு காலையில் போனேன்...... வந்தார் ...... பார்த்தார்........
வெயிட்...... என்றார்... வெளியே போனார்.... 2 மணிக்கு வந்தார் மீண்டும் ‘ காத்திரு’ என்றார்...
போனார்....... 4 மணிக்கு திரும்பவும் வந்தார்.... உள்ளே போனார்... 5 மணிக்கு வந்தார்......
என்னை பார்த்தார்... அதே ” காத்திரு ”............! அது வழக்கமான ஒன்று தான்....?
அந்த அலுவலகம் 5வது மாடியில் இருந்தது... கீழே வந்து ஒரு சிகரெடை ஆழமாக இழுத்தேன்..
என்ன பண்ணலாம் இருக்கலாமா.... போய் நாளைக்கு வரலாமா.... குழப்பம்.....குழப்பம்...
ஒரு முடிவோடு 5 மாடிகளை படிஏறி கடந்தேன்....
வரவேற்பு அறையில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.....கடைசியாக ரிசப்ஷனிஸ்ட் எழுந்தார்....
என்னை ஒரு மாதிரியாக பார்த்து....’ காத்திருக்க போகிறிர்களா’ என்றார்.. நான் ஆம் என்றேன்...
சிரித்தபடி வெளியே கிளம்பினார்(ள்)....
கடந்த ஒரு மாதமாக அந்த அலுவலக்த்தில்....பிளாரண்ட் சார் தவிர அனைவரும் ......! ஆம்..
அனைவரும் எனக்கு பழக்கமாகி இருந்தனர்...
மணி 6.30.......7.00........7.30.......8.00.......8.30........9.00.........9.30......... நான் காத்திருந்தேன்.....!
அடுத்த
வரிக்கு
போகுமுன்
அன்னிக்கு
நான்
எத்தனை
மணி
வரை காத்திருந்தேன்.....
என்று
உங்களால்
யூகிக்க முடியுமா....?
அதிகமில்லை ஜெண்டில்மேன்.....!
இதோ அந்த நேரம் வந்து விட்டது....?
சரியாக இரவு 02.00 (அதிகாலை) சேர்மென்.திரு. தேவ நாதன் வெளியே வந்தார்....
(இவரைப்பற்றி இன்னொரு பகுதியில் சொல்கிறேன்)
ஒரே ஒரு நொடி என்னை பார்த்தார்....
பின்னால் பிளாரண்ட் வந்தார்...... அவர் முகத்தில் ‘ஷாக்’ ... நீ இன்னுமா வெயிட்
பண்ற.... என்றார்..... அதில் எனக்கு புரிந்தது.....!
நீங்க தான் சார் வெயிட் பண்ண சொன்னிங்க என்று அவர் மீதே பழி போட்டேன்...
கடிகாரத்தை பார்த்தார்.... என்னை பார்த்தார்.......
இண்டர்வியு இல்லை...! என்ன வேலை என தெரியாது... !
எனக்கு என்ன தெரியும் ....! என்று............அவருக்கு தெரியாது.....
மாமாவும்....அவர் அப்பாவும்.... ஞாபத்தில்வந்திருக்க வேண்டும்......!
உடனே முடிவெடுத்தார்.... அது தான் அவர்....!
நீ நாளைக்கு ஜாயின் பண்ணிடு ...... சொல்லிவிட்டு வேகமாக வெளியே போனார்.....
நான் தேதியை பார்த்தேன்.....02.02.2002....
சந்தோஷத்தையும் மீறி மிகுந்த களைப்பாய் உணர்ந்தேன்....
உங்களுக்கு தூக்கம் வரல....... போய் படுங்க....!
மீண்டும் சந்திப்போம்.....


4 comments:
மென்மேலும் சிறப்பான பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் அண்ணா .
idhayampesukiren .blogpsot .com
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.
நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!
புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!
அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!
அன்புடன் இனியவன்
நன்றி இனியவன்......
Post a Comment