Powered By Blogger

Thursday, March 8, 2012

தட்டு........ (சாப்பாட்டு தட்டு தான்....)



தட்டு....


அப்பாவின் சைக்கிள் மணி சத்ததிற்காக காத்திருந்த காலம் அது.
எனக்கு ‘தூக்கனாம்சாமி’ன்னு பேர்..... காரணம் 7 மணி ஆனால் எனக்கு 
தூக்கம் வந்துவிடும்....... 
(இப்ப எல்லாம் லேட்டா தான் தூக்கம் வருது.... ஆனா முழிப்பு மட்டும் 5.30 
மணிக்கே வந்துடுது.....)
அதுனால எனக்கு மட்டும் சாப்பாடு முதலில் போட்டு விடுவார்கள்....
அப்பா வேலையில் இருந்து வரும் போதெல்லாம் கையில் ஏதாவது
தீனி பொட்டலம் இருக்கும்.....
எங்கள் ஐந்து பேருக்கு அம்மா தான் பங்கு வைப்பார்கள்...
நான் எங்கள் வீட்டில் 4வது ஆள்....  தெரிந்தோ தெரியாமலோ வைக்கும்
பங்க்கில் ஒன்னு கூடுதலாக இருக்கும்......அது எனக்கு தான் கிடைக்கும்....
தங்கை என்னை விட சிறியவள் இருந்தாலும் எனக்கு தான்......அது....

வழக்கம் போல் அப்பா ஒரு பார்சலோடு அன்று வந்தார்.....
அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது......செய்தி தாளில் சுத்தி இருந்தது.
நிச்சயம் அது தின்பண்டம் இல்லை என தெரிந்தது...... 

அதை வாங்கி அவசரம் .... அவசரமாக பிரித்தால்.... பளபளப்பாக 
என் முகத்தை அது பிரதிபலித்தது....
அது ஒரு “தட்டு”  ஓவல் ஷேப்பில் இருந்தது.....
கீழே தேயாமல் இருக்க நாண்கு குமிழ்கள் இருந்தது.....
ரொம்ம அழகா இருந்தது......

அழகாய் இருப்பது மேல் எல்லாம் எனக்கு ஆசை வரும்.. 
(இன்னைக்கு வரைக்கும்...?..அது ஒரு பெரிய லிஸ்ட்)

வழக்கம் போல் சில சண்டைகளுக்கு பிறகு
அது எனக்கே கொடுக்கப்பட்டது..... விலை ஸ்டிக்கரை கூட பிரிக்காமல்
அன்று இரவு சாப்பிட்ட பால் சாதம்.....? சுவை இன்று வரை நாக்கில் இருக்கிறது..

கொஞ்ச நாள் நானே அதை கழுவி .... மற்ற தட்டுகளோடு வைக்காமல்....
வைத்தால் கீரல் விழும் இல்லயா....பாதுகாத்தேன்.....

சென்னைக்கு ஓடிவரும் வரை அதில் தான் சாப்பாடு.......ஓடி வரும் அவசரத்தில்
தட்டை மறந்து போனேன்..... ஒரு எட்டு மாதம் கழித்து அது என்னிடம் வந்து சேர்ந்தது....

நம்பினால் நம்புங்கள்
அன்றிலிருந்து இன்று வரை..... அந்த தட்டில் தான் என் உணவு.....
எனக்கு இந்த தட்டின் மீது தீராத காதல் உண்டு....

ஒரு 42 - 43 வருஷமா ..ரொம்ப ஆச்சரியமா இருக்கு......
கீழே இருக்கும் குமிழ் கூட அப்படியே தான் இருக்கிறது....
ஒரு முறை கோவத்தில் (போதையில்)சோறோடு அதை விசிறி அடித்திருக்கிறேன்.....
அதற்க்காக அது எனக்கு அன்னதை குறைத்தது இல்லை..

ஒரு வருடம் மாமியார் வீட்டில் இருந்த போது கூடஅதில் தான் .......
மனைவி- பிளைகள் என்னை ஒரு மாதிரியாக பார்பதும் உண்டு.....
சாதாரண தட்டுக்கே நாம இவ்வளவு சென்சிட்டிவா இருக்கமே....?
அன்னலட்சுமி......
அடுத்த முறை சாப்பிடும் போது தட்டை ஒரு முறை பாருங்கள்.....
இன்னும் எத்தனை நாள் அதில் உணவு உன்ன போகிறோம் என்பது
அதில் தெரியும்.....

No comments: