![]() |
பண்டிகை நாட்கள்
( மொதல்லியே சொல்லிடறேன் நா ரொம்ப சீரியஸான ஆள் )
|
அம்மாவிடம் அடம் பிடித்து வாங்கிய 5 ரூபாய் ரொம்ப அழுக்காய் இருந்தது..
இப்பவோ அப்பவோ கிழிய காத்திருந்தது.... கடை வரைக்கும் இதை பத்திரமாக கொண்டு போக வேண்டும்.... கடைக்காரன் இது செல்லாது என சொல்லாதிருக்க வேண்டும்.... முக்கியமாக இது தொலையாது இருக்கனும்.....
கடலை மிட்டாய் துணுக்குகளுக்காக எலி என் கால் சட்டை பாக்கெட்டை கடித்து குதறி இருந்தது.
அது ரொம்ம நல்ல எலி..... மேல் பக்கத்தை விட்டு விட்டு பாக்கெட்டை மட்டும் கடித்திருந்தது.....
எப்படியும் துவைக்கும் போது கண்டு பிடித்துவிடுவார்கள்...
அந்த 5 ரூபாயை பாக்கெட்டில் வைக்க முடியாது.... மேல் சட்டையில் பாக்கெட் இருந்ததா என் ஞாபகம் இல்லை...... கையில் வைத்து இறுக்கி மூடி... என ஜாவா மோட்டார் சைக்கிளை ஸ்டாட் செய்தேன்... அதில் சீராக வரும் டட்.... டட்... டட்... எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரியவனாகி வாங்கற சம்பளத்துல.... மொதல்ல ஒரு “ஜாவா” ... அதுக்கு முன்னாடி அம்மாவுக்கு ஒரு மூட்டை சக்கரை காபிக்குதான்..அதுக்கு மின்னாடி அப்பாக்கு ஒரு லாரி சார்மினார் சிகரெட்.... அப்பா சிகரெட் பிடிப்பதே அழகாய் இருக்கும்...அதுக்கு முன்னாடின்னு... எனக்கு நிறய கனவுகள் இருந்தது...
ஹாரனில் வைத்த கையை எடுக்காம ஓட்டி நிறய பேரை மிரட்டுவேன் ... (இப்ப என் வண்டிக்கு பின்னாடி ஹார்ன் அடிச்சி திட்டு வாங்கினவங்கள்ல நீங்களும் இருக்கலாம்)...
அந்த பட்டாசு கடை முன் வண்டியை நிறுத்திவிட்டு.. பார்த்தால் ஏற்கனவே பட்டாசு வாங்கியவன்
சரக்கை சரிபார்த்துக்கொண்டிருந்தான்..... அவன் பையன் கையில் இந்த வானத்துல போய் வெடிச்சு பூ...பூவாகொட்டுமே அது பெரிய பாகெட் வைத்திருந்தான்....
கையில் இருந்த 5 ரூபாய் மேலும் கசங்கி ஈரமாக இருந்தது.... உள்ளங்கையில வேர்த்தால் ‘காசு’கையில தங்குமாமே உண்மையா....... ?
கம்பி மத்தாப்பு பெரியது...5.... சின்னது......5 ராக்கெட் பெரிசு ...10..... ரோல் கேப் 5 டஜன்..... அவர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது.....
அவர்கள் நகர்ந்தபோது இருப்பதிலியே பெரிய பாம் பாக்கட்டை கையில் எடுத்து என்ன விலை என கேட்கும் முன் ‘என்ன சொல்லுட்டா...... என்றார்....
அந்த பையன் என்னை பார்த்து சிரித்தது போல இருந்தது..
கை தானா பாம் பாக்கெட்டை இருந்த இடத்தில் வைத்தது.....
வாய் .... ரெண்டு கேப் ரோல் என்றது....
ம்....
ஊசி வெடி ஒரு பாக்கெட்....
பாம்பு மத்தாப்பு ஒரு பாக்கெட்.....(கொசு ஒழியுமாம் அம்மா சாய்ஸ்)
பட்டாசு ரகத்திலியே ரொம்ப மொக்கையானது அது தான் ..... கரி என்ஜின் ரயில் வண்டி மாதிரி புகை மட்டும் தான் வரும்... பெரியவனானா அத கண்டு புடிச்சவன ஒரு வாட்டி பாக்கனும்...
ம்... அப்புறம்.....
எவ்வளவு ஆச்சி..... அந்த கடையில் அப்ப விலை பட்டியல் இல்லை
துப்பாக்கி வருமா.... 5 ரூபாயை நீட்டினேன்....
எட்டாக மடித்து இருந்த நோட்டை அவர் அதை மெல்ல பிரித்து ... உயரே தூக்கி பார்த்தார்....
என் நல்ல நேரம்....
துப்பாக்கி வராது.... இந்தா என்று ஒரு போல்ட் நட் கொடுத்தார்......
ஒரு போல்ட் நட் இரண்டு வாசர் வைத்து இருக்கும்..... உங்கள் யாருக்காவது அது ஞாபகம் இருக்கா..... நட்டை லேசா லூஸ் பண்ணி வாசர்களுக்கு இடையில் கேப் வைத்து மெல்ல அதை டைட் பண்ணி வீசி தரையில் எறிந்தால் வெடிக்கும்...... கிட்டத்தட்ட “கையெறி குண்டு ”மாதிரி...
இதை கொண்டு வந்து வீட்டு வாசலில் .... சுவத்தில் வீசி நா பன்ற அட்டகாசம் தாங்க முடியாது.....
ஊசி வெடிய கையிலயே புடிச்சி வெடிப்போம்.....
ம்... அப்புறம் பெருசானா பசங்கள பட்டாசு கடைக்கு கூட்டிட்டு போய் .... என்ன வேனுமோ வாங்கிக்கங்கன்னு சொல்லனும்னு நினைச்சுக்குவேன்.....
பண்டிகைக்கு அம்மா எண்ணை சட்டி வைப்பார்கள்..... வடை சுட தான்......
நிறய இனிப்புகள் இருக்கும்... லட்டு.... மைசூர் பாக்கு...சோமாஸ்... தேங்கா பர்பி.... முறுக்கு....
எல்லாம் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து வரும்......
கடைசி நேரத்தில் ரெடிமேட் டவுசர் (கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும்) சட்டை கிடைக்கும்... யாருடைய ஸ்பான்சரிலாவது....
இப்படியாக எங்களின் பண்டிகை நாட்கள் கழியும் அப்போதெல்லாம்......
பின் குறிப்பு.......
மாமியார் ஜாமீன் கையெழுத்தில் முதல் முதலாக ஒரு டிவிஎஸ் 50 (சாம்ப்) TN 04 Z 3250
வாங்கினேன்..... ஜாவா மார்கெட்ல இல்ல....
சக்கரை விலை காரனமாக ஒரு மூட்டை சக்கரை வாங்கவே முடியாமல் போனது.....
சக்கரைக்கே அந்த கதின்னா ஒரு லாரி சிகரெட்....?......( அப்பாவுக்கு என எதுவும் செய்ய முடியாமல் போனது..............அவரின் கடைசி யாத்திரை செலவை த்தவிர) ...அப்பாவின் ஞாபகமாக எனக்கு தொற்றிக்கொண்டது சிகரெட் பழக்கம்...
பசங்கள அழைச்சிட்டு பட்டாசு கடைக்கு போகவே முடியல..... காரணம் எனக்கு இரண்டும் பெண்கள்.... ( காச கொடுதா போதும் இப்ப எல்லாம் துணியும் மணியும் அவர்களே வாங்கி கொள்கிறார்கள் .... நம்பள விட செலக்ஷன் நல்லாவே இருக்கு)
இப்போது அம்மா எண்ணை சட்டி வைப்பதில்லை மருமகளை வைக்க சொல்லி விட்டார்கள்.. இப்பவும் முதல் வடை எனக்கு தான்....
அடுத்தது என்ன பண்டிகைப்பா வருது........ சமீபமா........


No comments:
Post a Comment